Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தம்பதி தாக்கு: சகோதரர்களுக்கு போலீஸ் வலை

தம்பதி தாக்கு: சகோதரர்களுக்கு போலீஸ் வலை

தம்பதி தாக்கு: சகோதரர்களுக்கு போலீஸ் வலை

தம்பதி தாக்கு: சகோதரர்களுக்கு போலீஸ் வலை

ADDED : ஜூன் 09, 2024 02:54 AM


Google News
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே வயதான தம்பதியை தாக்கிய சகோதரர்கள் மூவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த வி.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கராஜன், 78; ஊரில் குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பாக, இவருக்கும், வேணு மகன்கள் துரைராஜ், சச்சிதாமூர்த்தி, பாலமுருகன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சகோதரர்கள் மூவரும் சேர்ந்து, ரங்கராஜன் மற்றம் அவரது மனைவி பூங்கோதை இருவரையும் தாக்கினர்.

காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரங்கராஜன் மகன் பழனிவேல் கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, சகோதரர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us