
கடலுார், : கடலுார் மாவட்ட செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
கடலுார் புனித வளனார் பள்ளியில், நடந்த போட்டிக்கு செஸ் அகாடமி செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் ஐந்து பிரிவுகளாக நடந்த போட்டியில், 4 முதல் 17 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.