Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனுமதியின்றி பேனர்; வி.சி., மா.செ., மீது வழக்கு

அனுமதியின்றி பேனர்; வி.சி., மா.செ., மீது வழக்கு

அனுமதியின்றி பேனர்; வி.சி., மா.செ., மீது வழக்கு

அனுமதியின்றி பேனர்; வி.சி., மா.செ., மீது வழக்கு

ADDED : ஜூன் 29, 2024 05:54 AM


Google News
கடலுார் : அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக, வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், வில்வ நகரைச் சேர்ந்தவர் வி.சி., மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி, 42; இவர் தனது குழந்தையின் காதணி விழாவிற்காக, நெல்லிக்குப்பம் சாலை தனியார் திருமண மண்டபம் எதிரில் 10 டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். அனுமதியின்றி பேனர் வைத்ததாக, கடலுார் புதுநகர் காவல் நிலையத்தில், மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ், புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில், அறிவுடைநம்பி மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us