Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தணிக்கையாளர்கள் தேவை

ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தணிக்கையாளர்கள் தேவை

ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தணிக்கையாளர்கள் தேவை

ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு தணிக்கையாளர்கள் தேவை

ADDED : ஜூலை 25, 2024 05:49 AM


Google News
கடலுார்: ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணி செய்ய விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகளை தணிக்கை செய்ய, தணிக்கையாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

விருப்பம்உள்ளதணிக்கையாளர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.

விண்ணப்பிக்கும் தணிக்கையாளர்கள் அரசு துறைகள், அரசு திட்டங்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம்பெற்றிருக்க வேண்டும். மேலும் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரத் திட்டத்தில்முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பம் உள்ள தணிக்கையாளர்கள் வரும் 31ம் தேதிக்குள் கடலுார் மாவட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்கத்தை அனுகவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us