/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2024 05:02 AM

கடலுார், : அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பன்னீர், ஒன்றிய செயலாளர் மகேஷ்பிரபு, ஒன்றிய தலைவர் அய்யாதுரை, பகுதி செயலாளர் சுந்தரபாண்டியன், பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் கிருஷ்ணன், துணை செயலாளர் வாஞ்சிநாதன் கண்டன உரையாற்றினர்.