Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருப்பணி நடத்த ஆலோசனை

திருப்பணி நடத்த ஆலோசனை

திருப்பணி நடத்த ஆலோசனை

திருப்பணி நடத்த ஆலோசனை

ADDED : ஜூலை 01, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான பாலாயணம் வரும் 12ம் தேதி நடக்கிறது.

அறநிலையத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் துவங்க உள்ளதாகவும். உபயதாரர்கள் சார்பில் அம்மன், மூலவர் கோபுரம், திருநாவுக்கரசர், விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் மண்டபங்கள் திருப்பணிகள் துவங்கப்பட வேண்டும்.

இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் நேற்று கோவில் நுாறுகால் மண்டபத்தில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வியாபாரிகள் சங்க செயலாளர் வீரப்பன், தொழிலதிபர் அருள், கவுன்சிலர்கள் கவுரிஅன்பழகன், கதிர்காமன், துரை, முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கூட்டத்தில் அறநிலையத்துறை சார்பில் கூட்டம் நடத்திட உரிய காலத்தில் அழைப்பு விடுக்காததால் உபயதாரர்கள் பலர் கலந்து கொள்ள முடியாததால் வரும் 7 ம்தேதி கூட்டம் நடத்தி பணிகள் துவங்குவது என முடிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us