/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:24 PM

வடலுார் : கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மின் கட்டணம் உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து, நெய்வேலி ஆர்ச் கேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், பாஷியம், வினோத், நகர செயலாளர்கள் கோவிந்தராஜ், பாபு, ஆனந்த பாஸ்கர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சகன், மாவட்ட பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், குறிஞ்சிப்பாடி ஒன்றிய சேர்மன் கலையரசி, விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்டத் துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டுரங்கன்,சத்யா அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் அன்பு, மாவட்ட இலக்கிய அணி உமாதேவன், அண்ணா தொழிற்சங்க வெற்றிவேல உட்பட பலர் பங்கேற்றனர்.