Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

சாராயம் பதுக்கிய 4 பேர் கைது 

ADDED : ஜூன் 20, 2024 09:03 PM


Google News
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா மற்றும் புதுச்சேரி சாராயம் பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சொக்கநாதன்பேட்டை செல்லசாமி, 60; வெள்ளக்கரை புருஷோத்தமன்,38; வானமாதேவி வேலு, 40 ஆகியோர் புதுச்சேரி சாராயத்தை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார் சாராயத்தை கைப்பற்றி, மூவரையும் கைது செய்தனர்.

அதேபோல் சிலம்பிநாதன்பேட்டை நான்குமுனை சந்திப்பில் சந்தேகத்து இடமாக நின்ற கீரப்பாளையத்தை சேர்ந்த முரளி, 26; என்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து, கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us