/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மீன் குழம்பு சாப்பிட்ட பெண் இறப்புமீன் குழம்பு சாப்பிட்ட பெண் இறப்பு
மீன் குழம்பு சாப்பிட்ட பெண் இறப்பு
மீன் குழம்பு சாப்பிட்ட பெண் இறப்பு
மீன் குழம்பு சாப்பிட்ட பெண் இறப்பு
ADDED : ஜன 29, 2024 12:53 AM
கோவை:மீன் குழம்பு சாப்பிட்ட மேற்கு வங்க பெண், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் குண்டன் ராம், 42. இவரது மனைவி அஞ்சலி தேவி, 39. இருவரும் சில நாட்களுக்கு முன், கோவைக்கு சுற்றுலா வந்தனர். பீளமேடு நேருநகரில் அஞ்சலி தேவி சகோதரரின் நண்பர் மைக்கேல் என்பவரது வீட்டின் அருகே, வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மதியம், வீட்டில் கணவன், மனைவி இருவரும் மீன் குழம்புடன் உணவருந்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அஞ்சலி தேவி மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், அஞ்சலி தேவியை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரிந்தது.
சற்று நேரத்தில் குண்டன் ராமும் மயங்கினார். அவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த பீளமேடு போலீசார், குண்டன் ராமிடம் விசாரித்தனர். இருவரும் கடைசியாக மீன் குழம்பு சாப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.