Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்த மாதம் ஏன் இப்படி ஒரு வெயில்? வேளாண் காலநிலை ஆய்வு மையம் விளக்கம்

இந்த மாதம் ஏன் இப்படி ஒரு வெயில்? வேளாண் காலநிலை ஆய்வு மையம் விளக்கம்

இந்த மாதம் ஏன் இப்படி ஒரு வெயில்? வேளாண் காலநிலை ஆய்வு மையம் விளக்கம்

இந்த மாதம் ஏன் இப்படி ஒரு வெயில்? வேளாண் காலநிலை ஆய்வு மையம் விளக்கம்

ADDED : ஜூன் 07, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
கோவை: மழை குறைந்துள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில தினங்களில் குறையும் எனவும், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, துவங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த மாதம் தெரிவித்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த வாரம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மலைப்பகுதிகளில், மழை அதிகளவில் பெய்தது.

கடந்த மாதம் 31ம் தேதிக்குப் பின், கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், மழை போய் வெயில் அதிகமாக இருந்து வருகிறது.

மழைகாலத்தில் வெயில் அடிப்பதன் காரணம் குறித்து, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தியிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், ''தற்போது மழை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெயில் அதிகரித்துள்ளது போல் தோன்றுகிறது. நமக்கு 36 - 37 டிகிரி செல்சியஸ்க்கு உள் தான் வெயில் உள்ளது. பிற பகுதிகளில்தான் வெயில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மெல்ல பருவமழை துவங்கியுள்ளது. காற்று அடிக்கத் துவங்கியுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் இனி இருக்காது. அடுத்த ஓரிரு நாட்களில் மழை இருக்கும். அப்போது வெப்பம் குறைந்து விடும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us