/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு
உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு
உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு
உரிமைத்தொகை என்னாச்சு; துளைத்தெடுக்கும் பெண்கள்! உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் தி.மு.க.,வினர் சமாளிப்பு

அலைய வைக்கும் அதிகாரிகள்
சுந்தரம் வீதியை சேர்ந்த ஈஸ்வரி கூறும்போது, ''அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், காத்திருக்க வைக்கின்றனர். அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு ஊழியர்கள் வருவதில்லை. ரேஷன் கடையாக இருக்கட்டும்; வி.ஏ.ஓ., அலுவலகமாக இருக்கட்டும்; எங்கு சென்றாலும் அலைய வைக்கின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தப்படுத்திக் கொடுங்கள்,'' என்றார்.
எங்க தொழிலேமுடங்கிப்போச்சு!
மண்பாண்டம் தயாரிக்கும் பாலகிருஷ்ணன், ''சுந்தரம் வீதியில் இதற்கு முன் சூளை இருந்தது. மண் பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தோம். இதை நம்பி, 500 குடும்பங்கள் இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, சூளை இடிக்கப்பட்டு விட்டது. குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து வந்து, வீட்டிலேயே விநாயகர் சிலை, தீபங்கள் தயாரிக்கிறோம். சூளை அமைக்க, 30 சென்ட் இடம் ஒதுக்கித் தர வேண்டும். பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். எங்கள் தொழிலே முடங்கியிருக்கிறது,'' என, முறையிட்டார்.
'மீண்டும், மீண்டும்விண்ணப்பித்தேன்'
அப்பகுதியை சேர்ந்த இன்னொரு பெண், 'மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தேன்; வரவில்லை. மீண்டும் விண்ணப்பித்தேன்; இன்னும் கொடுக்கவில்லை' என முறையிட்டார்.
ரோடு எல்லாம்குண்டு, குழி
பீளமேடு பகுதியை சேர்ந்த இன்னொரு பெண் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கச் சொல்லுங்கள். ரோடெல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது; வாகனங்களில் செல்ல முடியவில்லை' என புலம்பினார்.
ஆறு கேள்விகள்
ஒவ்வொரு வீடாக சென்று, 10 நிமிடம் பேசுகிறோம். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் யாராவது பயன் அடைகிறார்களா என்பது உள்ளிட்ட ஆறு கேள்விகள் கேட்கிறோம். முதலில், கட்சிக்காரர்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகிறோம். படிப்படியாக மற்றவர்களையும் சந்திப்போம். இப்பணியை கட்சியினர் சரியாக செய்தால், மக்களின் மனநிலையை தெளிவாக அறியலாம்; ஆட்சியை எடை போடலாம். மக்கள் சொல்லும் கோரிக்கைகளை தனியாக எழுதி, மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்போம்' என்றனர்.