விற்க மாட்டோம்!
கல்லுாரி மாணவர்கள் கூறுகையில், 'முதல் முறையாக ஓட்டு போட போகிறோம். எனது ஓட்டை யாருக்காவும் விற்க மாட்டோம். ஒரு முறை ஓட்டு போட பணம் வாங்கினால், ஐந்து ஆண்டுகளுக்கு கேள்வி கேட்க முடியாது. எனவே, ஓட்டை விற்காமல் நல்லவர்களை தேர்வு செய்து ஓட்டளிப்போம்,' என்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாப் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வால்பாறை
வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, தாசில்தார் வாசுதேவன் தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
உடுமலை
உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தலைமையாசிரியர் சாவித்ரி தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு உறுதிமொழி வாசித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


