Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிற்பயிற்சி அட்மிஷன் வரும், 31 வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி அட்மிஷன் வரும், 31 வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி அட்மிஷன் வரும், 31 வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி அட்மிஷன் வரும், 31 வரை நீட்டிப்பு

ADDED : அக் 16, 2025 08:44 PM


Google News
வால்பாறை: வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த கல்வியாண்டில், கடந்த ஜூன் மாதம் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இருப்பினும் மொத்தம் உள்ள, 104 சீட்களுக்கு நேற்று வரை, 65 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், வரும், 31ம் தேதி வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் கூறுகையில், ''தொழிற்பயிற்சில் சேர எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மாணவர்கள் வசதிக்காக இம்மாதம், 31ம் தேதி வரை நேரடி அட்மிஷன் நடக்கிறது. கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us