/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முருக பக்தர் மாநாடு கோவிலில் வேல் பூஜை முருக பக்தர் மாநாடு கோவிலில் வேல் பூஜை
முருக பக்தர் மாநாடு கோவிலில் வேல் பூஜை
முருக பக்தர் மாநாடு கோவிலில் வேல் பூஜை
முருக பக்தர் மாநாடு கோவிலில் வேல் பூஜை
ADDED : ஜூன் 01, 2025 11:26 PM
மேட்டுப்பாளையம் : மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து, வீடு வீடாக அழைப்பிதழ் வழங்குவதற்கு முன்பாக, பா.ஜ., சார்பில் மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவிலில் வேல் பூஜை நடந்தது.
மதுரையில் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க மேட்டுப்பாளையம் மக்களுக்கு பா.ஜ., சார்பில் வீடு வீடாக அழைப்பு கொடுக்கும் பணி துவங்கியது.
முன்னதாக, மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பா.ஜ., வினர் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.