/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து உயர்ந்தது மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து உயர்ந்தது
மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து உயர்ந்தது
மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து உயர்ந்தது
மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து உயர்ந்தது
ADDED : ஜூன் 01, 2025 11:12 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) - 120, தேங்காய் (ஒன்று) - 35, கத்திரிக்காய் - 42, முருங்கைக்காய் - 60, வெண்டைக்காய் - 35, முள்ளங்கி - 28, பூசணிக்காய் 10, அரசாணிக்காய் - 10, பாகற்காய் - 55, புடலை - 17, சுரைக்காய் - 15, பீக்கங்காய் - 50, பீட்ரூட் - 25, வெள்ளரிக்காய் - 25, அவரைக்காய் - 90, பச்சை மிளகாய் - 55 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்ற வாரத்தைக்காட்டிலும் தற்போது, தக்காளி - 70, கத்திரிக்காய் - 9 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும், தேங்காய், வெண்டைக்காய் மற்றும் பீட்ரூட் 5 ரூபாயும், முருங்கைக்காய் மற்றும் பாகற்காய் 10 ரூபாயும், பூசணிக்காய் அரசாணிக்காய் மற்றும் சுரைக்காய் 2 ரூபாயும், பீர்க்கங்காய் - 15 பச்சைமிளகாய் - 25 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அனைத்து காய்கள் வரத்தும் அதிகரித்தது. ஒவ்வொரு காய்கள் வகையிலும், 100 கிலோ வரை அதிக அளவு வரத்து இருந்தது. பெரும்பாலான காய்கள் விலையும் அதிகமானது,'என்றனர்.