Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

ADDED : செப் 16, 2025 09:56 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், கிணத்துக்கடவு மயானம் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே சிவகங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார், 35, என்பவரிடமிருந்து, 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, சிக்கலாம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே வடபுதுாரை சேர்ந்த ராமு, 29, என்பவரிடமிருந்து, 26 மது பாட்டில்கள் என, மொத்தம், 41 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us