Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியினர் ஆடல், பாடல்

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியினர் ஆடல், பாடல்

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியினர் ஆடல், பாடல்

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியினர் ஆடல், பாடல்

ADDED : செப் 07, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; பரளிக்காட்டில், வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில், பயணிகளை ஈர்க்க பழங்குடியினர் நடன நிகழ்ச்சி புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .

சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், 10க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல் என வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பரளிக்காடு உள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியாக நேற்று முன்தினம் முதல் சூழல் பழங்குடியினர ஆடல், பாடல் நிகழ்ச்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது.

காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''இதனால், பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 100 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us