/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நடைபாதையில் குப்பை; பொதுமக்கள் பாதிப்புநடைபாதையில் குப்பை; பொதுமக்கள் பாதிப்பு
நடைபாதையில் குப்பை; பொதுமக்கள் பாதிப்பு
நடைபாதையில் குப்பை; பொதுமக்கள் பாதிப்பு
நடைபாதையில் குப்பை; பொதுமக்கள் பாதிப்பு
ADDED : பிப் 12, 2024 12:05 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நடைபாதையில், தண்ணீர் கசிவு ஏற்பட்ட இடத்தில் சிதறிக்கிடக்கும் குப்பையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
எண்ணற்ற வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டின் இருபுறங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், அரசு அலுவலகம் போன்றவை உள்ளன.
இதனால், இந்த அரசுப்பள்ளி அருகே எப்பொழுதும் நெரிசல் நிறைந்து காணப்படும். மேலும், காலை மற்றும் மாலை நேரத்தில், பள்ளி மாணவர்கள் வந்து செல்வதால், சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும்.
இந்நிலையில், இப்பள்ளியின் அருகே உள்ள நடைபாதையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு நடைபாதையில் ஏகமாக தண்ணீர் காணப்படுகிறது. இதில், பிளாஸ்டிக் கவர்கள் ஏகமாக நீரில் கிடப்பதால், இந்த நடைபாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மாணவர்கள் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டுநர்களுக்கு மாலை நேரத்தில் சிரமம் ஏற்படுகிறது.
அவ்வப்போது பைக் ஓட்டுநர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து, உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.