Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஜூன் 22, 2025 11:32 PM


Google News
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்பு வாசிகளுக்கு, அரசு பஸ் வசதி செய்ய, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 1800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இதில், பலர் குடியேறிவிட்டனர். இப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். பஸ் வசதி ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காந்திபுரத்திலிருந்து குப்பச்சிபாளையம் வரை இயக்கப்படும், 104 வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும் எனவும், உக்கடம், மேட்டுப்பாளையம் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us