Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உழவர்சந்தையில் கடந்த மாதம் 1.99 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

உழவர்சந்தையில் கடந்த மாதம் 1.99 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

உழவர்சந்தையில் கடந்த மாதம் 1.99 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

உழவர்சந்தையில் கடந்த மாதம் 1.99 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

ADDED : ஜூலை 03, 2025 08:37 PM


Google News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 1.99 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது.

பொள்ளாச்சி உழவர்சந்தையில், மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், விற்பனைக்கு காய்கறி கொண்டு வருகின்றனர்.

காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், ஒரு கோடியே, 99லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த மாதம் நாளொன்றுக்கு, 6 லட்சத்து, 65 ஆயிரத்து, 689 ரூபாய் மதிப்புள்ள, 15,202 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. தினமும், 57 விவசாயிகள், 3,040 நுகர்வோர்கள் பயனடைந்தனர்.

கடந்த மாதம் மொத்தம், 456 மெட்ரிக் டன் காய்கறி வரத்து இருந்தது. மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 99 லட்சத்து, 97ஆயிரத்து, 690 ரூபாயாகும். மொத்தம், 1,733 விவசாயிகள்; 91,213 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us