Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ADDED : மார் 23, 2025 10:11 PM


Google News
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தாமரைக்குளம் பகுதியில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு, தாமரைகுளத்தை சேர்ந்தவர் சக்திவேல் முருகன், 41, பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையாவது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானது. இதில், கடையில் இருந்து, 263 கிராம் அளவில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சக்திவேல் முருகனை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us