Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செல்வமகள் திட்டத்தில் திருப்பூர் 2ம் இடம்

செல்வமகள் திட்டத்தில் திருப்பூர் 2ம் இடம்

செல்வமகள் திட்டத்தில் திருப்பூர் 2ம் இடம்

செல்வமகள் திட்டத்தில் திருப்பூர் 2ம் இடம்

ADDED : மார் 18, 2025 09:55 PM


Google News
-நமது நிருபர் -

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் இரண்டாமிடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த, 126 தபால் அலுவலர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் தமிழக தபால்துறை தலைவர் மரியம்மா தாமஸிடம், திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன், கடந்த நிதியாண்டில், 10,529 செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்கியதற்கு விருது பெற்றார்.

செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் இரண்டாமிடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளதால், விருது கிடைத்துள்ளது.

தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில்,''இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us