ADDED : ஜூன் 29, 2025 11:59 PM

கோவை; கோவை சரவணம்பட்டியில் உள்ள, எஸ்.எம்.எஸ்., மஹாலில் திருவாசகம் முற்றோதல் திருவிழா நேற்றுநடந்தது.
காலை 6:00 மணிக்கு, ரத்தினகிரி குமரக்கடவுளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிரவணபுரீசுவரர், சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. இதன் பின், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி துவங்கி, மதியம் 2:00 மணி வரை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அடியார்கள் பங்கேற்றனர்.