Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அகற்றிய வழிகாட்டி பலகை அமைக்க ஆளில்லையாம்!

அகற்றிய வழிகாட்டி பலகை அமைக்க ஆளில்லையாம்!

அகற்றிய வழிகாட்டி பலகை அமைக்க ஆளில்லையாம்!

அகற்றிய வழிகாட்டி பலகை அமைக்க ஆளில்லையாம்!

ADDED : ஜூன் 12, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
வால்பாறை ; வால்பாறையில், வழிகாட்டி பலகை அகற்றப்பட்டு, சாலையோரம் கிடப்பதால் சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பு. இந்த சந்திப்பில் சோலையாறுஅணை, வால்பாறை, குரங்குமுடி பகுதிக்கு செல்லும் ஐந்து ரோடுகள் சந்திக்கின்றன.

இந்த இடத்தில், சுற்றுலா பயணியர் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை அகற்றினர்.

ரவுண்டானா பணி நிறைவடைந்து மூன்று மாதத்திற்கு மேலாகியும், அதே இடத்தில் வழிகாட்டி பலகை மீண்டும் வைக்கப்படவில்லை. இதனால், பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் வழித்தடம் தெரியாமல் தவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால், சுற்றுலா பயணியர் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணியாளர் பற்றாக்குறையால், அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை மீண்டும் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வழிகாட்டி பலகை மாதா கோவில் சந்திப்பில் அமைக்கப்படும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us