Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இளநீர் பண்ணை விலையில் எந்த மாற்றமும் இல்லை 

இளநீர் பண்ணை விலையில் எந்த மாற்றமும் இல்லை 

இளநீர் பண்ணை விலையில் எந்த மாற்றமும் இல்லை 

இளநீர் பண்ணை விலையில் எந்த மாற்றமும் இல்லை 

ADDED : ஜன 08, 2024 01:12 AM


Google News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையில் மாற்றம் இல்லை.

பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலையில் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் இளநீரை மக்கள் விரும்பி பருகுகின்றனர்.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல், 18 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 7,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவுவதாலும், பல பகுதிகளில் ஈரியோபைட் சிலந்தி பூச்சி தாக்குதலின் காரணமாக, தரம் குறைந்ததாலும் இந்த வாரம் விலை உயர்த்தப்படவில்லை.

பொங்கலுக்கு பின், நிச்சயமாக விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us