Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இளங்கலை படிப்புகளுக்கு வரும் 27ம் தேதி கடைசிநாள்

இளங்கலை படிப்புகளுக்கு வரும் 27ம் தேதி கடைசிநாள்

இளங்கலை படிப்புகளுக்கு வரும் 27ம் தேதி கடைசிநாள்

இளங்கலை படிப்புகளுக்கு வரும் 27ம் தேதி கடைசிநாள்

ADDED : மே 22, 2025 11:38 PM


Google News
கோவை : கோவை அரசு கலைக் கல்லுாரியில், இளங்கலை பாடப்பிரிவுகளில் 1,727 இடங்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.

மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக வழங்கப்படமாட்டாது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் பெற மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லுாரிக்கு வரத்தேவையில்லை என, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தகவல் மையம் செயல்படும். இம்மையம் வாயிலாக மாணவர்கள், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

வரும், 27ம் தேதி இறுதி நாள் என்பதால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்க கல்லுாரி முதல்வர் எழிலி அறிவுறுத்தியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us