Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!

யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!

யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!

யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!

ADDED : ஜன 06, 2024 09:02 PM


Google News
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.2.98 கோடியில் உக்கடம் பெரிய குளத்தின் மேற்கு கரையில், 'எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்' அமைக்கப்பட்டிருக்கிறது.

உள்ளே நுழைந்தால், '3டி' கண்ணாடி வழங்குகின்றனர். அதை அணிந்ததும், ஏர்கண்டிஷன் அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர். சற்று நேரத்தில் திரையில் '3டி' படம் விரிகிறது.

சிறுவாணி அடிவாரத்தில், கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் நாம் நடந்து செல்வது போலவும், அங்கு தேங்கியுள்ள தண்ணீரை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு, அருகில் இருப்பது போலவும், காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.

மங்கி பால்ஸ், வைதேகி நீர்வீழ்ச்சி, மருதமலை முருகன் கோவில், டவுன்ஹால் கோனியம்மன் கோவில் என ஒவ்வொரு இடமாக, நம்மை அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொன்றாக பார்த்து மனதை பறிகொடுத்த ஆச்சரியம் தீர்வதற்குள், ஆனைமலை புலிகள் காப்பக யானையின் தும்பிக்கையை, வருடிக் கொடுத்துக் கொண்டிருப்போம். அத்தனையும் 3டி தொழில்நுட்பம்!

வரலாறு அறியலாம்


ஆச்சரியத்தோடு சற்று நகர்ந்து... பக்கத்துக்கு அறைக்குள் சென்றால்... வரிசையாக தொடு திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில், கோவையை சுற்றியுள்ள நீர் நிலைகளை பற்றிய அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுவாணியை பற்றி அறிய விரும்பி, அதை 'டச்' செய்தால்... அதன் வரலாறு திரையில் வருகிறது. நொய்யல் ஆற்றை பற்றி அறிய விரும்பினால்... அதுவும் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வரலாறை அறிந்து கொண்டு, கடைசி திரைக்கு சென்றால்... உங்கள் அறிவுக்கு சவால் விடுக்கும் வகையில் , நான்கு பதில் கொடுத்து, சரியான பதில் கேட்டு, வினா கேட்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, சிறுவாணி அணையை உருவாக்கியவர் யார் என கேட்டு, நான்கு பதில்கள் கொடுக்கப்படுகின்றன. முந்தைய ஸ்கிரீனில் நாம் அதை படித்திருந்தால், இங்கு சரியான பதிலை சொல்ல முடியும்.

தவறான பதிலை குறிப்பிட்டாலும், சரியான பதில் சொல்லப்படுகிறது. இந்த அறையில், நீர் நிலைகள் குறித்த நமது பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இம்மையத்துக்கு சென்று வந்தால், பிரமிப்பு மட்டுமின்றி, மனதை வருடும் அனுபவமும் கிடைக்கும்!

'திருவள்ளுவரே' சொல்கிறார்!

மையத்தின் கடைசி அறைக்குள் சென்றால், நம்மை 'திருவள்ளுவர்' வரவேற்கிறார். எத்தனை திருக்குறள்; அதிகாரம் எத்தனை; எத்தனை தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; எந்த வார்த்தை, திருக்குறளில் பயன்படுத்தவில்லை போன்ற புள்ளிவிபரங்களை, திருவள்ளுவரே நமக்கு முன் அமர்ந்து பாடம் நடத்துகிறார்.அப்போது, அவரே குறள் சொல்லி, அதற்கான அர்த்தங்களை விளக்கி, பின்பற்ற வேண்டிய காரணத்தை கூறுகிறார்.



டைனோசருடன் விளையாடலாம்!

இதன் பிறகு பக்கத்துக்கு அறைக்குள் நுழைந்தால், நமது பிரமிப்பை இன்னும் கூட்டுகிறது. இங்கும் 3டி கண்ணாடி தருகிறார்கள். துப்பாக்கி போல் கையில் ஒரு பொருள் தருகிறார்கள். வட்டத்தில் நிற்கச் சொல்லி, திரையை பார்க்கச் சொல்லும் நிமிடத்தில், டைனோசர் நம்மை மிரட்டுகிறது.அடர்ந்த வனத்துக்குள் பல வகை டைனோசர்கள் ஓடுகின்றன. அவை நம்மை கடந்து ஓடுவது போல், திரையில் காட்சிகள் மிரட்டுகின்றன. நமது காலுக்கு கீழ் டைனோசர் முட்டைகள் இருக்கின்றன. அவற்றை எடுக்க, டைனோசர்கள் ஓடி வருகின்றன. நமது கையில் கொடுத்துள்ள ஆயுதத்தை வைத்து அவற்றை விரட்டியடிக்க வேண்டும்.ஒரு டைனோசரை விரட்டி அடித்தால் 6 பாயின்ட். அதே நேரம், நம்மை டைனோசர் தாக்கி விட்டால், 6 பாயின்ட் மைனஸாகி விடும். குட்டீஸ் மிஸ் பண்ணக்கூடாத இடமிது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us