Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முள் மரங்கள் வளர்ந்து ஒத்தையடி பாதையான பெள்ளாதி குளக்கரை

முள் மரங்கள் வளர்ந்து ஒத்தையடி பாதையான பெள்ளாதி குளக்கரை

முள் மரங்கள் வளர்ந்து ஒத்தையடி பாதையான பெள்ளாதி குளக்கரை

முள் மரங்கள் வளர்ந்து ஒத்தையடி பாதையான பெள்ளாதி குளக்கரை

ADDED : மே 26, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; பெள்ளாதி குளக்கரையில், புதர் போல் வளர்ந்துள்ள, முள் மரங்கள், செடிகள் ஆகியவற்றை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில், பெரிய குளம் உள்ளது. தற்போது கரையில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகள் ஆகியவற்றை பொதுப்பணித்துறை நிர்வாகம், சுத்தம் செய்யாததால், கரையின் இரு பக்கம் புதர் மண்டி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பெள்ளாதி குளக்கரையின் மீது நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு, கரை அகலமாக இருந்தது. தற்போது இருசக்கர வாகனங்கள், புதருக்குள் நுழைந்து செல்லும் வகையில் உள்ளன. கரையில் பெரிய அளவில் முள் மரங்கள் வளர்ந்துள்ளதால், அதன் வேர்கள் கரையை சேதம் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெள்ளாதி ஊராட்சி மக்களும், காரமடை நகராட்சி மக்களும், இந்த குளத்தின் கரை வழியாக, வேலைகளுக்கு சென்று வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை நிர்வாக அதிகாரிகள், கரையில் உள்ள முள் மரங்களையும், மற்ற மரங்களையும், செடிகளையும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us