Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோடை உழவுக்கு 550 ஏக்கர் இலக்கு

கோடை உழவுக்கு 550 ஏக்கர் இலக்கு

கோடை உழவுக்கு 550 ஏக்கர் இலக்கு

கோடை உழவுக்கு 550 ஏக்கர் இலக்கு

ADDED : மே 17, 2025 04:25 AM


Google News
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தற்போது கோடை உழவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். கோடை உழவு மேற்கொள்வதால், மண் அரிப்பு தடுக்கப்பட்டு, பூச்சிகள் மற்றும் புழுக்கள் அளிக்கப்படுகிறது.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய துவங்கியுள்ளனர். கோடை உழவுக்கு, 550 ஏக்கர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு 'உழவன் செயலி' அல்லது வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என, வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) அருள்கவிதா, வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us