Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்யாயனா பள்ளியில் விளையாட்டு விழா

அத்யாயனா பள்ளியில் விளையாட்டு விழா

அத்யாயனா பள்ளியில் விளையாட்டு விழா

அத்யாயனா பள்ளியில் விளையாட்டு விழா

ADDED : செப் 17, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
கோவை; வடவள்ளி, பொம்மணம்பாளையத்தில் இயங்கி வரும் தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளியில், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியபடி மைதானத்தைச் சுற்றி வந்தனர். மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிந்து, கால்பந்து, கைபந்து, எறிபந்து, ஹாக்கி, ஓட்டப்பந்தயம், இறகுபந்து, நீளம் தாண்டுதல், கூடைப்பந்து என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், ''தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வர, மனவலிமை பெற, மாணவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்,'' என்றார்.

விழாவில், பள்ளி இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், துணை இயக்குனர் சவுமியா ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us