Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

ADDED : செப் 09, 2025 10:43 PM


Google News
கோவை; கோவை மண்டல கூட்டுறவு வங்கிகளில் வழங்கிய கடன்களுக்கு, 2022 டிச., 31ல் தவணை தவறி நிலுவையில் உள்ள தொகையை திருப்பிச் செலுத்த, சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், கடனை தீர்ப்பதற்கு, 2024 செப்., 12க்கு முன் 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்கள், 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவர்கள், தற்போது மொத்த கடன் தொகையையும் நிலுவை தீர்வு செய்யும் நாள் வரை, 9 சதவீத வட்டியில், 23க்குள் ஒரே தவணையில் செலுத்தி, தீர்த்துக் கொள்ளலாம்.

தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் தள்ளுபடி செய்யப்படும், என, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us