Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

ADDED : செப் 12, 2025 10:15 PM


Google News
சூலுார்; சுல்தான்பேட்டை அருகே தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சுல்தான்பேட்டை அடுத்த குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி, 50.டிராக்டர் டிரைவர். இவரது மனைவி லீலாவதி, மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆறுச்சாமி, குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த, 11ம் தேதி ஆறுச்சாமி குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன் சபரிநாதன், 21, குழவி கல்லால் தந்தையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். காயமடைந்த ஆறுச்சாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சபரி நாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us