Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்தாம் வகுப்பு தேர்வில் எஸ்.கே.வி., பள்ளி அசத்தல்

பத்தாம் வகுப்பு தேர்வில் எஸ்.கே.வி., பள்ளி அசத்தல்

பத்தாம் வகுப்பு தேர்வில் எஸ்.கே.வி., பள்ளி அசத்தல்

பத்தாம் வகுப்பு தேர்வில் எஸ்.கே.வி., பள்ளி அசத்தல்

ADDED : மே 18, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
கோவை, ;பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டம், ம.கந்தம்பாளையம், எஸ்.கே.வி., பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, தொடர் சாதனை புரிந்துள்ளனர்.

பள்ளி அளவில், கனிஷ்கா என்ற மாணவி 495 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். மாணவி தமிழ்விழி, 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி லக் ஷ னா 492 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

மேலும், 490க்கு மேல் ஐந்து மாணவர்கள், 480க்கு மேல் 16 பேர், 470க்கு மேல் 38 பேர், 460க்கு மேல் 51 பேர், 450க்கு மேல் 60 பேர், 400க்கு மேல் 100 பேர் என சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து, சாதனை படைத்த மாணவர்களை, பள்ளியின் தலைவர் ரவி, பொருளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் ஜெகநாதன் உள்பட இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us