/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!
முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!
முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!
முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!

ஓர் ஆண்டில்...
வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக, போக்குவரத்து விதிமுறை மீறல், வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.கடந்த ஆண்டில், 1,944 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. வரி மற்றும் அபராத தொகையாக ஒரு கோடியே, 12 லட்சத்து, 84 ஆயிரத்து, 292 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., ஆபீசில் இருந்த வாகனங்கள் அபராதம் செலுத்தி மீட்கப்பட்டுள்ளன.
351 வாகனங்கள்
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில், 430 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 151.79 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்கள் - 183, மூன்று சக்கர வாகனங்கள் - 2, நான்கு சக்கர வாகனங்கள் - 56, என, மொத்தம், 241 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த, ஐந்து ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 351 வாகனங்கள் உள்ளன. இதில், 25 வாகனங்கள், கடந்த, 10ம் தேதி பொது ஏலம் விடப்பட்டது.இதே போன்று, மற்ற வாகனங்களையும் ஏலம் விடப்படும் என்கின்றனர் போலீசார்.
ஏழு ஆண்டுகளாக ஏலம் விடல!
உடுமலை சப்-டிவிஷன் ஸ்டேஷன்களில், திருட்டு, கஞ்சா, கொலை, விபத்து மற்றும் கனிம வளக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என, ஏழு ஆண்டுகளில், 1,518 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சப்-டிவிஷனில் 128 வாகனங்கள்!
வால்பாறை உட்கோட்டத்தில், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. உட்கோட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து, ரேஷன் அரிசி கடத்தல், அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளன.
இடத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2012 முதல் கஞ்சா கடத்தல், வாகன திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்டேஷன் வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.