Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆறு முறை கோப்பை வென்ற வீரர்

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆறு முறை கோப்பை வென்ற வீரர்

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆறு முறை கோப்பை வென்ற வீரர்

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆறு முறை கோப்பை வென்ற வீரர்

ADDED : ஜூன் 23, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
கோவை:கோவை மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில வீரர்கள் கலந்து கொண்டனர். 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், வீரர் சங்கர், 11-8, 9-11, 11-9, 8-11, 11-8 என்ற புள்ளி கணக்கில் வீரர் ஸ்ரீதரை வீழ்த்தினார். இரண்டாவது அரையிறுதியில், வீரர் பீஷ்மன், 15-13, 11-7, 11-7 என்ற புள்ளிகளில் வீரர் அலெமை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில், வீரர் சங்கர், 8-11, 11-7, 11-8, 9-11, 12-10 என்ற புள்ளிகளில் வீரர் பீஷ்மனை வீழ்த்தி முதல் பரிசை வென்றார். வீரர் சங்கர் ஆறாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரை சக வீரர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us