/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு
தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு
தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு
தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு
ADDED : மே 21, 2025 11:46 PM

கோவை; தமிழ் பாடங்களுக்கான பாடவேளை ஆறு மணி நேரம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என, பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.பல்கலையில், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய சில துறைகளுக்கு இளநிலை முதலாமாண்டு மட்டுமே தமிழ் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
பிற துறைகளுக்கு முதல், இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடம் அதாவது, நான்கு தாள்கள் மாணவர்கள் எழுதினர். இதிலுள்ள முரண்பாடுகளை களைய, 2021ல் இளநிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தமிழ் பாடம் கட்டாயம் படிக்கவேண்டும் என அரசு அறிவித்தது.
பாரதியார் பல்கலையில் இந்த அறிவிப்பு, 2023 - 24ம் ஆண்டு முதல் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.பாரதியார் பல்கலையில், 2022 - 23ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் போது, பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. பிற பாடங்களுக்கு, 6 மணி நேரமாக பாடவேளை ஒதுக்கப்பட்டது.
ஒரே பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க, துறைகளுக்கு வெவ்வேறு பாடவேளை நேரம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அனைத்து துறைகளுக்கும் தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பல்கலை நிர்வாகம் இதை சரிசெய்யும் விதமாக பல்கலையின் இளநிலை பாடத்திட்டக்குழு தலைவர்களுக்கு உத்தரவை வழங்கியுள்ளது.
உத்தரவில், அனைத்து இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் முதல், இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்மொழி பாடத்துக்கு ஆறு மணி நேர பாடவேலை என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா இவ்வுத்தரவை வழங்கியுள்ளார். பல்கலையின் இந்த நடவடிக்கைக்கு தமிழாசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.