Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி நீர் மட்டம் 37.82 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37.82 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37.82 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 37.82 அடியாக உயர்வு

ADDED : அக் 21, 2025 10:44 PM


Google News
கோவை: சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், 17 முதல் மழை பெய்து வருகிறது. அதற்கு முந்தைய நாள் 16ம் தேதி அணை நீர் மட்டம், 36.51 அடியாக இருந்தது. ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை காணப்படுவதால், நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

தீபாவளி பண்டிகை (20ம் தேதி) தினத்தன்று அணை பகுதியில் 37 மி.மீ., அடிவாரத்தில் 49 மி.மீ., பதிவானது. நேற்றைய தினம் (21ம் தேதி) அணையில் 16 மி.மீ., அடிவாரத்தில் 13 மி.மீ., பதிவானது. குடிநீர் தேவைக்காக 9.21 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழையளவு: பெ.நா.பாளையம் - 32, பில்லுார் அணை - 19, கோவை தெற்கு - 12, சூலுார் - 26.40, பதிவானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us