Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணியில் 24 மி.மீ. மழை 38.84 அடியானது நீர்மட்டம்

சிறுவாணியில் 24 மி.மீ. மழை 38.84 அடியானது நீர்மட்டம்

சிறுவாணியில் 24 மி.மீ. மழை 38.84 அடியானது நீர்மட்டம்

சிறுவாணியில் 24 மி.மீ. மழை 38.84 அடியானது நீர்மட்டம்

ADDED : செப் 21, 2025 03:56 AM


Google News
கோவை : கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணையின் நீர்த்தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில், நீர்க்கசிவு காரணமாக, 44.61 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க, கேரள நீர்ப்பாசனத் துறையினர் அனுமதிக்கின்றனர்.

வெப்பச் சலனம் காரணமாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 24 மி.மீ., மழை, அடிவாரத்தில் 6 மி.மீ., மழையும் பெய்துள்ளது.

அணை நீர் மட்டம், 38.84 அடியாக நேற்று இருந்தது. மாநகராட்சி பகுதிகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் தேவைக்காக, 9.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us