ADDED : ஜூன் 16, 2025 09:42 PM
கோவை; ஆமதாபாதில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்த 270 பேருக்கு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, 45க் கும் மேற்பட்ட நீதிமன்ற அறை மற்றும் அலுவலகங்களில், நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், வக்கீல்கள், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு சென்ற பொதுமக்கள், போலீசார் உள்ளிட்ட அனைவரும், இரண்டு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகல் 2:30 மணிக்கு, நீதிமன்ற வளாகத்திலுள்ள 'பெல்' அடித்தவுடன், எழுந்து நின்று அஞ்சலி செலுத்தி விட்டு, 2:32 மணிக்கு மீண்டும் 'பெல்' அடித்த பிறகு, இருக்கையில் அமர்ந்தனர்.