Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமான பணி விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம்

கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமான பணி விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம்

கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமான பணி விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம்

கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமான பணி விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தம்

ADDED : ஜூன் 23, 2025 04:30 AM


Google News
கோவில்பாளையம்: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி துவங்க வந்த அதிகாரிகள் விவசாயிகள் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.

சின்னவேடம்பட்டி ஏரியில், கவுசிகா நீர்க் கரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சீரமைப்பு பணி செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சி சார்பில் கழிவு நீரை சுத்திகரித்து, சின்ன வேடம்பட்டி ஏரியில் விடுவதற்கான கட்டுமான பணிகளை துவக்க நேற்று குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் நேற்று வந்தனர். பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணியை துவக்கினர். இந்த தகவலறிந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

பொதுமக்கள், அதிகாரிகளிடம் பேசுகையில், 'பல ஆண்டுகளாக இந்த ஏரி சீரமைக்கப்பட்டு ஏரியில் நீர் தேக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கழிவு நீரை இந்தக் குளத்தில் நிரப்பினால் நிலத்தடி நீர் பாதிக்கும். விவசாயம் பாதிக்கும். இதுகுறித்து கலெக்டர் தலைமையிலான முறையீட்டுக் குழு கூட்டத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம்.

கலெக்டர் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் செயல் விளக்கம் செய்து காண்பிக்க வேண்டும். பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன் பிறகு நடத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் கலெக்டரின் உத்தரவை மீறி மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இப்பணியை துவக்குகின்றனர்,'' என்றனர்.

இதனால், வருவாய் துறையினர் அங்கு இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us