Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீஸ் கமிஷனர் உத்தரவை மீறி நகருக்குள் திரிந்த ரவுடிக்கு சிறை

போலீஸ் கமிஷனர் உத்தரவை மீறி நகருக்குள் திரிந்த ரவுடிக்கு சிறை

போலீஸ் கமிஷனர் உத்தரவை மீறி நகருக்குள் திரிந்த ரவுடிக்கு சிறை

போலீஸ் கமிஷனர் உத்தரவை மீறி நகருக்குள் திரிந்த ரவுடிக்கு சிறை

ADDED : மார் 20, 2025 05:38 AM


Google News
கோவை: போலீஸ் கமிஷனரின் உத்தரவை மீறி, மாநகர பகுதிக்குள் சுற்றித்திரிந்த ரவுடியை, போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 21. இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் மாநகர பகுதிக்குள் சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டத்தின் '51 ஏ' பிரிவின் கீழ், ஹரிஹரனை ஆறு மாதங்கள் மாநகருக்குள் வரக்கூடாது என, கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், போலீஸ் கமிஷனரின் உத்தரவை மீறி, ஹரிஹரன் மாநகர பகுதிக்குள் சுற்றி திரிந்து வந்தார். அவ்வப்போது, அடிதடி போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார், எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் இருந்த ஹரிஹரனை பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகர பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டும், வெளியேறாமல் இருக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் எச்சரித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us