Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ADDED : ஜூன் 08, 2025 04:44 AM


Google News
சென்னை : இந்த ஆண்டில், ஏப்ரல் வரை, 29 வழக்குகளில் ரவுடிகளுக்கு தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை:

தமிழகம் முழுதும் ரவுடிகளுக்கு எதிரான வழக்குகளை மண்டல வாரியாக, டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மாநகரங்களில் தலைமையிடத்து துணை கமிஷனர்கள், மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கண்காணிக்கின்றனர்.

இதன் காரணமாக, விசாரணை முடிவுறும் நிலையில் வழக்குகள், தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 376 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டில், ஏப்ரல் வரை, 29 வழக்குகளில் ரவுடிகளுக்கு தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us