Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறப்பு பஸ்கள் வாயிலாக ரூ.83.59 லட்சம் வருவாய்

சிறப்பு பஸ்கள் வாயிலாக ரூ.83.59 லட்சம் வருவாய்

சிறப்பு பஸ்கள் வாயிலாக ரூ.83.59 லட்சம் வருவாய்

சிறப்பு பஸ்கள் வாயிலாக ரூ.83.59 லட்சம் வருவாய்

ADDED : ஜூன் 10, 2025 09:52 PM


Google News
கோவை; பள்ளிகள் திறப்பை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, ரூ.83.59 லட்சம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த, 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கோவை திரும்பினர். பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கடந்த, 2, 3ம் தேதிகளில், 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 1.20 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் வாயிலாக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, ரூ.83.59 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us