Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புள்ளிகள் குவித்த ராஜலட்சுமி அணி; சூடுபிடித்தது ஒய்.எம்.சி.ஏ., டிராபி

புள்ளிகள் குவித்த ராஜலட்சுமி அணி; சூடுபிடித்தது ஒய்.எம்.சி.ஏ., டிராபி

புள்ளிகள் குவித்த ராஜலட்சுமி அணி; சூடுபிடித்தது ஒய்.எம்.சி.ஏ., டிராபி

புள்ளிகள் குவித்த ராஜலட்சுமி அணி; சூடுபிடித்தது ஒய்.எம்.சி.ஏ., டிராபி

ADDED : ஜூன் 29, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
கோவை; ஒய்.எம்.சி.ஏ., டிராபி போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணி, 73-20 என்ற புள்ளிகளில,் ஸ்பைஷ் அணியை வென்றது.

கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில், 69வது ஒய்.எம்.சி.ஏ., வெங்கடகிருஷ்ணன் டிராபி போட்டி கடந்த, 25ம் தேதி துவங்கியது; ஜூலை, 6ம் தேதி நிறைவடைகிறது. மாவட்ட அளவிலான இப்போட்டியில், மினி பாய்ஸ், மினி கேர்ல்ஸ், ஜூனியர் பாய்ஸ், மென் ஆகிய பிரிவுகளில், 59 அணிகள் பங்கேற்றுள்ளன.

'மினி பாய்ஸ்' பிரிவில், ஒய்.எம்.சி.ஏ., அணியும், பீப்பல் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், ஒய்.எம்.சி.ஏ., அணி, 39-31 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. ராஜலட்சுமி மில்ஸ் ஹை ஸ்கூல்(ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-ஏ) அணியும், ஸ்பைஷ் அணியும் விளையாடின.

ஆரம்பம் முதலே புள்ளி மழை பொழிந்த, ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணியினர், 73-20 என்ற புள்ளிகளில் எதிரணியை வென்றனர்.

எஸ்.வி.ஜி.வி.,-ஏ அணியினர், 49-24 என்ற புள்ளிகளிலும், ஸ்டேன்ஸ் அணியினர், 68-28 என்ற புள்ளிகளிலும் சுகுணா இன்டர்நேஷனல் அணியினரை வென்றனர். எஸ்.வி.ஜி.வி., அணியினர், 63-39 என்ற புள்ளிகளில் பாரதி-ஏ அணியை வென்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us