Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் தொடர்பு முகாம் நடக்கும் தேதி மாற்றம்

மக்கள் தொடர்பு முகாம் நடக்கும் தேதி மாற்றம்

மக்கள் தொடர்பு முகாம் நடக்கும் தேதி மாற்றம்

மக்கள் தொடர்பு முகாம் நடக்கும் தேதி மாற்றம்

ADDED : மே 10, 2025 02:14 AM


Google News
வால்பாறை : வால்பாறையில், வரும் 15ம் தேதிக்கு மக்கள் தொடர்பு முகாம் மாற்றப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில், வரும் 14ம் தேதி, மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களால் மக்கள் தொடர்பு முகாம் வரும், 15ம் தேதி காலை, 10:30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே வால்பாறை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் குறைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி மனுக்கள் மீது 15ம் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்படும்.

இத்தகவலை, வால்பாறை தாசில்தார் மோகன்பாபு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us