Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

நகருக்குள் யானை 'விசிட்' அச்சத்தில் பொதுமக்கள்

ADDED : ஜன 23, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
வால்பாறை:வால்பாறை கக்கன் காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள உத்தரகாளியம்மன் கோவில் பின்பக்கம், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு குட்டியுடன் வந்த மூன்று யானைகள், தொழிலாளியின் வீட்டு பின்பக்கம் உள்ள வாழைகளை உட்கொண்டன. சப்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் அரை மணி நேரத்திற்கு பின், யானைகள வனப்பகுதிக்குள் விரட்டினர். எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த யானைகள், மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகருக்குள் விசிட் செய்ததால், மக்கள் பீதியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us