/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
ADDED : ஜன 27, 2024 12:02 AM
கோவை: மாநகராட்சி நிரந்தர துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட, 2,220 பேருக்கு காலணி, சோப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. மிளிரும் ஜாக்கெட், மழை கோட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 19வது வார்டுக்கு உட்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 20 பேருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை, மேயர் கல்பனா வழங்கினார். மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


