Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 26 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டம்

26 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டம்

26 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டம்

26 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டம்

ADDED : ஜூன் 17, 2025 09:29 PM


Google News
கோவை; தமிழகத்தில், ஒவ்வொரு 5000 மக்கள் தொகைக்கும், ஒரு துணை சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

கிராம சுகாதார செவிலியர்கள் இங்கு பணியில் இருப்பர். சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பல்வேறு பதிவேடுகள் பராமரித்தல், கர்பிணிகளின் பதிவுகள், கர்ப்பணி பெண்களுக்கு வழங்கும் தடுப்பூசிகள்,தவிர சிறிய அளவிலான காயங்கள், சிகிச்சை அளிக்கும் செயல்பாடுகள் இங்கு நடைபெறும்.

மாநில அளவில், வாடகை மற்றும் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வரும், 300 சுகாதார நிலையங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டங்கள் கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், '' கோவையில், 26 துணை சுகாதார நிலையங்கள் பழைய சுகாதாரநிலைய கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இங்கு, புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான நிர்வாக ஒப்புதல் கிடைப்பதற்கான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும், '' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us