Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்வதேச போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்

சர்வதேச போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்

சர்வதேச போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்

சர்வதேச போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்

ADDED : ஜூன் 04, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
சூலுார்; ஆர்.வி.எஸ்., கோப்பைக்கான சர்வதேச சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட சதுரங்க கழகம், கோவை பிரண்ட்ஸ் சதுரங்க கிளப் சார்பில், ஆர்.வி.எஸ்., கோப்பை மற்றும் முதலாவது தரவரிசை புள்ளிகளுக்கான சர்வதேச சதுரங்க போட்டிகள், சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரி வளாகத்தில் நடந்தன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் கொரியா, அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த, 275 வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற, 70 க்கும்மேற்பட்ட வீரர்களுக்கு, கோவை மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள், கல்லுாரி நிர்வாகிகள், பிரண்ட்ஸ் சதுரங்க கிளப் நிர்வாகிகள், ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us