Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்; காதி சார்பில் ரூ.1.30 கோடி மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்; காதி சார்பில் ரூ.1.30 கோடி மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்; காதி சார்பில் ரூ.1.30 கோடி மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்; காதி சார்பில் ரூ.1.30 கோடி மானியம்

ADDED : ஜூன் 11, 2025 06:46 AM


Google News
கோவை; காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.,) தமிழ்நாடு மாநில இயக்குநர் சுரேஷ், கோவை மாவட்ட உதவி இயக்குநர் சித்தார்தன் ஆகியோர் கூறியதாவது:

கே.வி.ஐ.சி., சார்பில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 8,794 பயனாளிகளுக்கு, ரூ.300 கோடி கடன் மானியம் விடுவிக்கப்பட்டது. ரூ.884 கோடி கடனில், இந்த மானியம் வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்வில், ஆணைய தலைவர் மனோஜ் குமார் மானியத்தை விடுவித்தார்.

நாட்டின் 6 மண்டலங்களுக்கும் மானியம் விடுவிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் மொத்தம் 2,445 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.80.26 கோடி மானியம் வழங்கப்பட்டது.

இதில், தமிழகத்துக்கு, 740 பயனாளிகளுக்கு, ரூ. 24.62 கோடி மானியம் விடுவிக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில், 34 பயனாளிகளுக்கு, ஒரு கோடியே 30 லட்சத்து 64 ஆயிரத்து 655 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us